புதுக்கோட்டையில் தண்ணீரில்லா கால்வாயில் சிக்கி தவித்த கன்று மீட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தண்ணீர் இல்லாத கால்வாயில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்றை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி இழுத்து காப்பாற்றினர்.புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தண்ணீர் இல்லா கால்வாயில் கன்று ஒன்று சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து உள்ளது. இதனையடுத்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீர் இல்லாத கால்வாயில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்றை கயிறு கட்டி பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்….

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !