புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,செப்.27: புதுக்கோட்டை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதி படி மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனே அமல்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி துவக்க உரையாற்றினார். முடிவில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் தவுலத் அலி நன்றி கூறினார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது