Wednesday, July 3, 2024
Home » புதுகை நகராட்சி பகுதிகளில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்

புதுகை நகராட்சி பகுதிகளில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்

by Ranjith

 

புதுக்கோட்டை,ஜன.13: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கூடுதல் ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். புதுக்கோட்டை நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குரங்குகளையும், நாய்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நகராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளுக்கு கூடுதல் ஆழ்துளை கிணறுகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோரிக்கைகளை பரிசீலித்து படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் லியாகத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi