புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

 

சிவகங்கை, மே 8: திருப்புவனம் அருகே கழுவன்குளம் கிராமத்திற்கு சிவகங்கையிலிருந்து கீழடி, பொட்டபாளையம் வழியாக புதிய வழித்தடத்தில் செல்லும் பேருந்தை மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், திமுக சார்பில் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, திருப்புவனம் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, ஈஸ்வரன், சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குழந்தி பிச்சை, ரவி, சக்திமுருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு கிளை நிர்வாகிகள் அண்ணாதுரை, கருப்புசாமி, சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை