புதிய ரேஷன்கடை திறப்பு: எம்பி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலை கட்டிட திறப்பு நடந்தது. காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உத்திரமேரூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 18.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடை கட்டிடம் மற்றும் நவீன பஸ் நிறுத்த நிழற்குடை ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். மாகறல் ஊராட்சியில் 13.8 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடை, ஆற்பாக்கம் ஊராட்சியில் 5 லட்சத்தில் நவீன பஸ் நிழற்குடை ஆகியவை எம்பி ஜி.செல்வம் திறந்து வைத்தார். ஒன்றிய திமுக செயலாளர் க.குமணன், நிர்வாகிகள் வீரராகவன், பரசுராமன், வக்கீல் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை