புதிய மின்மாற்றி திறப்பு

அரூர்: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தாசரஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தழுத்த மின்சப்ளையால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்தில் புதியதாக வழித்தடம் அமைத்து, ₹10.42 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 11 கே.வி டிரான்ஸ்பார்மரை அரூர் சம்பத்குமார் எம்எல்ஏ பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் யசோதா மதிவாணன், ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மார்கண்டன், துணை தலைவர் சம்பத், மின்வாரிய செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சக்திமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்