திருத்துறைப்பூண்டி, ஜூன் 11: தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத்துஏஏஏறை இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி, உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் வழிகாட்டுதலின்படி பூசலாங்குடி ஊராட்சி புஞ்சையூர் கிராமத்தில் நடைபெற்றது. கால்நடை மருத்துவர் சந்திரன் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினர் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போட்டு கோமாரி நேயின் பொருளாதார இழப்புகள் குறித்து விளக்கப்பட்டது.