புச்சா நகரில் மீட்கப்பட்ட சடலங்களில் முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 3 செ.மீ ஈட்டி: உக்ரைன் தடயவியல் மருத்துவர் தகவல்

கீவ்: புச்சா நகரில் மீட்கப்பட்ட சடலங்களில் முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 3 செ.மீ நீளமுள்ள ஈட்டி போன்ற அம்புகள் இருந்தன என்று, உக்ரைன் தடயவியல் மருத்துவர் தெரிவித்தார். ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரமான புச்சாவில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான பொதுமக்களின் உடல்களில் இருந்து சிறிய உலோக அம்புகள் (ஈட்டி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் மீது வீசப்பட்ட அம்புகள் முதல் உலகப் போரின் (1914 முதல் 1918 வரை) போது பயன்படுத்தப்பட்டவை. ரஷ்யப் படைகளின் பீரங்கிகள் மூலம் இந்த அம்புகளை பொதுமக்கள் மீது தாக்கியுள்ளனர். இந்த அம்புகள் ஃப்ளெசெட் சுற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. புச்சா நகரை விட்டு ரஷ்யப் படைகள் வெளியேறும் போது, இந்த சிறிய அம்புகளை கொண்டு தாக்கியுள்ளனர். புச்சா நகரில் மீட்கப்பட்ட சடலங்களை பிரேத பரிசோதனை செய்த போது, மக்களின் மார்பு மற்றும் மண்டை ஓடுகளில் சிறிய உலோக ஈட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது’ என்றனர். இதுகுறித்து உக்ரைன் தடயவியல் மருத்துவர் விளாடிஸ்லாவ் பைரோவ்ஸ்கி கூறுகையில், ‘ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் பல மெல்லிய, ஆணி போன்ற உலோக அம்புகளை கண்டுபிடித்துள்ளோம். பாதுகாவலரின் கூற்றுப்படி, இந்த வகை ஆயுதங்கள் முதல் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. 3 முதல் 4 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அம்புகள், பீரங்கி பந்துகளில் வைப்பதன் மூலம் ஃப்ளெசெட் சுற்றுகள் சுடப்படுகின்றன. அவ்வாறு சுடும் போது, ​​இந்த குண்டுகள் வெடித்து சிதறும். இவை பொதுமக்கள் மீது தாக்கும் போது அவர்கள் உடற்பகுதிகள் சிதைந்து மடிந்துவிடுவார்கள்’ என்றார்….

Related posts

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்

ஈரான் அதிபர் தேர்தலில் 2ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு

வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நேபாள பிரதமர்