திருச்செங்கோடு, செப்.27: நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள், கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் ஆகிய இடங்களில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க, புகை மருந்து அடிக்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் சிவா மற்றும் நகராட்சி ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்.