புகையிலை விற்ற இருவர் கைது

திருச்சி, ஜூலை 5: திருச்சியில் புகையிலை விற்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அந்த கடையில் ரங்கம் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடையில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷை(46) கைது செய்து ஒன்றரை கிலோ புகையிலை மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதைப்போல், திருச்சி சிங்காரத்தோப்பு சின்ன செட்டி தெருவில் உள்ள பெட்டி கடையில் புகையிலை விற்ற பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த நவீன்குமாரை(35) கைது செய்தனர். மேலும் இரண்டே முக்கால் கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை