புகையிலை பொருட்கள் விற்ற 2 பேக்கரிக்கு சீல்

திருச்செங்கோடு, ஜூன் 27: திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள், ஓட்டல், பேக்கரி ஆகியவற்றில், நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையில் சுகாதார அலுவலர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் குழு கடைகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுகள், புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேக்கரிகள் கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்களுக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகரில் உள்ள 30 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு விதி மீறியவர்களுக்கு ₹28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்