புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

கடலூர், பிப். 9: கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார், அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (44) என்பவரின் மளிகை கடையில் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் சோதனை செய்தபோது, ராஜம் (57) என்பவர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில் ராஜம் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி