கீழக்கரை, ஜூன் 23: கீழக்கரை-ஏர்வாடி முக்கு ரோடு பகுதிகளில் கோட்ட ஆய அலுவலர் முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர், எஸ்ஐ கோட்டைச்சாமி ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள ராம்குமார் என்பவருக்கு சொந்தமான கடையில் ஆய்வு செய்தனர். அப்போது, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், துணை வட்டாட்சியர் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் உடன் இருந்தனர்.