பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே,போதை புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ய முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, மது விற்பனை செய்யப்படுகிறதா என வடக்கிபாளையம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம், எஸ்ஐ.,கணேசமூர்த்தி மற்றும் போலீசார், நடுப்புணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையருகே இருவர் மூட்டையை தூக்கி கொண்டு சென்றனர்.சந்தேகமடைந்த போலீசார், அந்த வாலிபர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கட்டுகட்டாக இருப்பதையறிந்தனர்.விசாரணையில் அவர்கள் பி.நாகூரை சேர்ந்த ஜேசுராஜ்(42), எம்ஜி புதூரை சேர்ந்த விமல்ராஜ்(29) என ெதரிய வந்தது. இதையடுத்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதித்து, இருவரையும் கைது செய்ததுடன், மொத்தம் 52 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து ஆங்காங்கே சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது….