புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

திருவேங்கடம், ஜூலை 7: குருவிகுளம் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், குருவிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் அய்யனார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காருடன் 31.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’