பீர்பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி, ஜூலை 11: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ராமன் மகன் கணேசன்(24). இவர் தனது நண்பர் சிட்டையாவுடன் பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் சாலையின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தெற்கு தெருவைச் சேர்ந்த ராமபாண்டி(24) என்பவர் கணேசனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து கணேசனின் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வேடந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமையில் பேசிய தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு