பீகார் வாலிபரிடம் செல்போன் பறித்த பிளஸ்2 மாணவர் உள்பட 3 இளஞ்சிறார்கள் கைது

தூத்துக்குடி, செப். 6:தூத்துக்குடியில் பீகார் வாலிபரிடம் செல்போன் பறித்த பிளஸ்2 மாணவர் உட்பட 3 இளஞ்சிறார்களை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராதாலால் மகன் ராஜ்குமார் (20). இவர், தூத்துக்குடி தனசேகரன் நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இங்குள்ள பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து கம்பால் தாக்கி அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து இதே பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவர் உள்பட 3 இளஞ்சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு