பி.எப். அலுவலகத்தில் 20ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரித்துராஜ் மேத்தி வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகத்தில் ஓய்வூதியருக்கான குறை தீர்ப்புக் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, ‘ஓய்வூதிய குறை தீர்ப்புக் கூட்டம்  ஈபிஎஸ் 1995’ என்ற தலைப்பிட்டு, மின்னஞ்சல் வாயிலாக வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு, pension.rochn1@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தமது பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், UAN, PPO எண், புகார் விவரங்கள் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி