பழநி, ஜூலை 6: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கன்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்களுடன் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் பொன்னாத்தாள், துணைத்தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி செயலர் என பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை, மாற்றுவழிகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
previous post