செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட குவளைகள், காகித தட்டுகள் இவைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள், வாழை, தாமரை, பாக்குமர இலைகள், உலோக மற்றும் பீங்கான் தட்டுகள், குவளைகள் ஆகிய பக்க விளைவுகள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி, பதாகைகளை ஏந்தியும் பிளாஸ்டிக் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர். …
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
previous post