பிரியாணி கடை ஊழியரை கத்தியால் தாக்கியவர் கைது

திருக்கோவிலூர், ஜூன் 12: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சவுரிமுத்து மகன் அந்தோணி குரூஸ் (28). இவர் திருக்கோவிலூர் அடுத்த சொறையப்பட்டு கிராமத்தில் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சொறையப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜாமணி மகன் பன்னீர்செல்வம் (27) என்பவர் பிரியாணி கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கத்தியை எடுத்து அந்தோணி கழுத்தில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த அந்தோணி குரூஸ் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்தோணி குரூஸ் கொடுத்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை