பிரபல ரவுடி குத்தி கொலை: 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் என்ற குட்டிமயில் (26) பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் குட்டிமயில், நேற்று இரவு பொன்மாந்துறை புதுப்பட்டி வழியாக செல்லக்கூடிய குடகனாறு பாலம் அருகே உள்ள சுடுகாட்டில் நண்பர்கள் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகிய 3 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், குட்டிமயில் தனது நண்பரான வீரமணியை எட்டி உதைத்துள்ளார். அவருக்கு முகத்தில் பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் ஆத்திரத்தில் உன்னை தீர்த்துக் கட்டி விடுவேன் என்று வீரமணியை அவர் மிரட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வீரமணி மற்றும் சேசுராஜ், தமிழ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, குட்டிமயிலிடம் இருந்த கத்தியை பறித்து அவரை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த குட்டிமயில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் அவர்கள் எதுவும் தெரியாதது போல், அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் குட்டிமயிலை கொலை செய்து ஆற்றுப்படுகையில் உடலை வீசியதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்களை சம்பவம் நடந்த பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்று ஆற்றுப்படுகையில் பார்த்தபோது, குட்டிமயில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது