Friday, July 5, 2024
Home » பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி கொசு மருந்து விற்ற 2 பேர் கைது

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி கொசு மருந்து விற்ற 2 பேர் கைது

by kannappan

அண்ணாநகர்: பிரபல கொசு மருந்து விற்பனை நிறுவனத்தின் மேலாளர் சதீஷ்குமார்,  கோயம்பேடு போலீசில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில், எங்களது நிறுவனத்தின் பெயரில் சிலர் போலி கொசு மருந்து விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அதில், போலி கொசு மருந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக, நெற்குன்றம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த இம்தியரஸ் (34), சூரஜ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5,000 மதிப்புள்ள போலி கொசு மருந்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, அந்த கடைக்கு  சிம்டிஏ நிர்வாகம் பூட்டு போட்டது….

You may also like

Leave a Comment

16 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi