பிரபல நடிகை வீட்டில் சித்ரவதை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சிறுமி கதறல்: சிறுமி உட்பட 2 பெண்கள் மீட்பு

சென்னை: பிரபல நடிகையின் வீட்டில் சிக்கியிருந்த 2 சிறுமிகளை போலீசார் மீட்டனர். அவர்களை காப்பகத்தில் வைத்துள்ளனர். சென்னை அண்ணாநகர், எச்.பிளாக் இரண்டாவது அவென்யூ பகுதியில் பிரபல நடிகை மும்தாஜ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு, மும்தாஜின் அம்மா வட மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி உட்பட இரண்டு பெண்களை வைத்துள்ளார். இருவரும் பல மாதங்களாக, அங்கு வேலை செய்து வருகின்றனர். இவர்களில், 17 வயது சிறுமி வீட்டு வேலை செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே, என்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி வீட்டு மும்தாஜிடம் பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சொந்த ஊருக்கு சிறுமியை அனுப்பாமல் சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் இருந்து அச்சிறுமி தப்பி வந்தாள். பின்னர், அப்பகுதியில்  நடந்து சென்ற ஒருவரிடம் செல்போன் வாங்கி, காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து நடிகை மும்தாஜ் வீட்டில் வீட்டு வேலை செய்வதாகவும், வீட்டு வேலை செய்வதற்கு என்னை சித்தரவதை செய்வதாகவும், என்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி போலீசாரிடம் சிறுமி கதறி அழுதாள். சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணா நகர் போலீசார் சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் இவரது அக்கா ஆகிய இருவரும் நடிகை மும்தாஜ் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தோம்.  அவர்களை வீட்டு வேலை செய்ய சொல்லி  சித்ரவதை செய்தனர். எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்   என்று அச்சிறுமி போலீசாரிடம் கதறி அழுதாள். இதையடுத்து, போலீசார் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி உட்பட இரண்டு பெண்களை மீட்டு, சென்னை அமைந்தகரை  நகரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து,  தொடர்ந்து  விசாரணை செய்து வருகின்றனர். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு