டேராடூன்: பிரபல ஓட்ட பந்தய வீராங்கனை ஜோத்சனா ராவத், டேராடூனில் தனது தோழியுடன் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டார். அவரை காரில் பின் தொடர்ந்த நபர் ஒருவர் ஜோத்சனாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த நபர் திரும்பி சென்றுவிட்டார். இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து உத்தரகாண்டின் டிஜிபி. அசோக் குமார் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட வீராங்கனை ஜோத்சனாவை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராய்ப்பூர் ேபாலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …