பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு; நண்பர்களை மட்டும் பணக்காரர் ஆக்குகிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது நண்பர்களை மட்டும் பணக்காரர்களாக்கி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டரில் ‘2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடித்து தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குவதே பிரதமரின் ஒரே பணியாகும். ஆளும் பாஜ கட்சி இரண்டு இந்தியாவை உருவாக்குகிறது. ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது. தனது நண்பர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு பிரதமர் உதவி செய்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். …

Related posts

உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!