பிரதமர் மோடி கூறியது போல் பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்: அமித்ஷா பேச்சு

புதுச்சேரி: பிரதமர் மோடி கூறியது போல் பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்துள்ள அமித்ஷா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது இசிஆரில் ரூ.70 கோடியில் புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குமரகுருபள்ளத்தில் ரூ.45 கோடியில் 13 அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையை ரூ.30 கோடியில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; பிரதமர் மோடி கூறியது போல் பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இருந்தது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்ச்சியைத்தான் காண முடிகிறது. புதுச்சேரியில் ரூ.150 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.16 கோடியில் தாவரவியல் பூங்கா புனரமைப்பு, ரூ.6 கோடி மதிப்பில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியை புதுமையாக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என கூறினார். …

Related posts

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து