Saturday, June 29, 2024
Home » பிரசவத்தின் போது இறந்த பெண் உடலை கேட்டு மறியல்

பிரசவத்தின் போது இறந்த பெண் உடலை கேட்டு மறியல்

by Ranjith

ராமநாதபுரம், செப்.11: ராமநாதபுரத்தில் பிரசவித்த பெண் இறந்ததால் உடலை உடனே வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கமுதி அருகே பறையங்குளத்தை சேர்ந்த காளிமுத்து மனைவி சித்ராதேவி(21). கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சித்ராதேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். சித்ராதேவியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை தான் (இன்று) மருத்துவ பரிசோதனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடனே பிரேத பரிசோதனை செய்து தரக்கோரி உறவினர்கள் மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

You may also like

Leave a Comment

19 − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi