பெங்களூரு: கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமுலு கலந்து கொண்டார். அந்த விழாவில் ராமுலு பேசுகையில், ‘பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது நான் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்தேன். கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்கள் எனக்கு வராது. அதே நேரம் பிட் அடித்து பாஸ் செய்வது விடுவேன்.பிட் அடிப்பதில் நான் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளேன். ஆனால் என்னுடைய பாணியை யாரும் கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏழைகளுக்காக போராடி 14 முதல் 15 முறை சிறை சென்றுள்ளேன்’ என்றார். இந்நிலையில் தேர்வில் காப்பி அடித்ததை ஒப்புக்கொண்ட ராமுலுவின் பேச்சு வைரலானது. …