பிச்சை எடுத்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு மூதாட்டி அடித்து கொலை: சக பிச்சைக்காரர் கைது

துரைப்பாக்கம், ஜூலை 16: திருவான்மியூரில் பிச்சை எடுத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார். திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் முன்பு சிலர் பிச்சை எடுத்து வருகின்றனர். இங்கு, கடந்த மாதம் 26ம் தேதி கிருஸ்து தாஸ் (63), பத்மா (60) ஆகிய இருவரும், ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுத்துள்ளனர். பின்னர் அந்த பணத்தை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கிருஸ்து தாஸ், அருகில் இருந்த கல்லை எடுத்து பத்மா தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் பத்மாவிற்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கிருஸ்து தாஸை தேடி வந்தனர். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில், கூவத்தூர் அருகே உள்ள முருகன் கோயில் வளாகத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது