பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெறலாம் முதன்மை பொதுமேலாளர் தகவல்

வேலூர், பிப்.9: பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெறலாம் என்று முதன்மை பொது மேலாளர் குமார் தெரிவித்துள்ளார். வேலூர் முதன்மை பொது மேலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தில் வேலூர் வர்த்தக பகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் வட்ட பகுதிகளில் சிம்கார்டுகள், ரீசார்ச் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களை www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும் விபரங்களுக்கு, உதவிப் பொது மேலாளார் (விற்பனை, வர்த்தகம்) மற்றும் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி (விற்பனை,வர்த்தகம்), ஆகியோர்களைத் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை