மைசூரு: மைசூரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவருக்கு நடந்த தேர்தலில் எம்.எல்.ஏ கே.மகாதேவின் மகன் பி.எம்.பிரசன்னா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மைசூரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 2.30 மணியளவில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரியாப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ மகாதேவ் மகன் பி.எம். பிரசன்னா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது….