பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

புதுச்சேரி, நவ. 8: பாண்லே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் பாண்லே நிறுவனத்திற்கு கடந்த 2022-23ம் ஆண்டில் பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், அவர்கள் வழங்கிய பாலுக்கு மொத்த மதிப்புக்காக ஒரு ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அந்த தொகை வழங்கப்படும். இதன் மூலம் கிராமங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்