பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பிணியான சிறுமிக்கு கட்டாய கருகலைப்பு: பெண் உள்பட 2 பேர் கைது

அரியலூர்,ஏப்.16: அரியலூர் அருகே பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பிணியான சிறுமிக்கு கட்டாய கருகலைப்பு செய்தவர் உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அரியலூர் மலத்தான்குளம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (48). கடந்த டிசம்பர் மாதம் இவர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பமானாராம். இந்நிலையில், அவருக்கு கடந்த 13ம் தேதி, முத்துசாமியின் ஆதரவாளர் மணிமேகலை என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி கருகலைப்பு மாத்திரை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, இது குறித்து அச்சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அச்சிறுமியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கண்ணியம்மாள், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துசாமியை கைது செய்தார். மேலும் அவருக்கு துணையாக இருந்து மணிமேகலையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை