சிவகங்கை, அக். 28: சிவகங்கை கோகலேஹால் தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீரத்னகர்ப கணபதி ஆலயம் ஸ்ரீசிருங்கேரிமடம் உள்ளது. இக்கோவில் திருப்பணி பாலாலய பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், ருத்ரஹோமம் தொடர்ந்து ரத்னகர்ப கணபதி ஆதிசங்கரர் சாரதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை சிருங்கேரி வேத விற்பன்னர் பப்பட்நிரஞ்சன் தலைமையிலான ஐந்து வேதவிற்பன்னர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சிருங்கேரி மட மேலாளர் ராமசாமி, சுஜாதாராஜூ, சந்திரசேகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.