பாலவிளையில் புதிய அங்கன்வாடி மையம்

மார்த்தாண்டம், ஜூலை 27: விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பாலவிளை அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் தலைமை வகித்தார். விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர் அங்கன் வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் எட்வின் ராஜ், சுனில், விஜயகுமாரி,மரியநேசம், கிறிஸ்டி பிரேம லதா, ஷீலா மற்றும் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி