பாலக்காடு, ஆலத்தூர் தொகுதிகளில் 16 வேட்பு மனுக்கள் ஏற்பு 8 மனுக்கள் தள்ளுபடி

பாலக்காடு, ஏப்.6: பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாநாட்டு அரங்கில் இரண்டு தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.சித்ரா, ஏடிஎம் பிஜூ ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 8 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது. பாலக்காடு, ஆலத்தூர் (தனி) ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலாக மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறக்கூடிய கடைசி தேதி ஏப் 8ம் தேதி. அன்றைய தினம் கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியிடப்படும். வரும் ஏப் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். எஸ். சித்ரா அறிவித்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை