பாலக்காடு அருகே குளத்தில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

 

பாலக்காடு, அக். 17: பாலக்காடு அருகே கொட்டேக்காட்டை அடுத்த கிழக்கு ஆனைப்பாறையை சேர்ந்த ஆறுமகன் – ஜலஜா தம்பதியர் மகன் அஜித் (20). இவர் பாலக்காடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருபவர். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அஜித் கால் தவறி குளத்து நீரில் வீழ்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த சக நண்பர்கள் கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர்.

உனடியாக விரைந்து வந்த அக்கம்பக்கத்து தொழிலாளர்கள் குளத்துநீரில் குதித்து அஜித்தின் உடலை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அஜித் உடலை பரிசோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வாலிகண்டபுரம் ஊராட்சியில் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு பொது குடிநீர் கிணற்றில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார் லெப்பை குடிகாடு பகுதியில் தேர்வான இடத்தில் விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்

கோரிக்கை மனு இலவசமாக எழுதி தர ஏற்பாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 60 மாதம் வரையான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம், ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணி