பார் ஊழியர் கொலையில் மாற்றுத்திறனாளி சிக்கினார்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கேரளாவை சேர்ந்த பாபு(48) வேலை பார்த்து வந்தார். கடந்த 5ம் தேதி உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பார் உரிமையாளர் ரவிச்சந்திரன் (எ) தொப்பி ரவி(60), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பார் இன்சார்ஜ் தட்சிணாமூர்த்தி(40) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து நடத்திய விசாரணையில், 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பாரில் வேலை கேட்டு வந்தார். அவரை பாபுவுடன் இரவு தங்க வைத்துள்ளனர். ஆனால் காலையில் அவர் காணவில்லை என தெரியவந்தது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியில் பதுங்கியிருந்த கொளத்தூர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பாலாஜி(44) என்ற மாற்றுத்திறனாளியை கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது