பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

 

புதுக்கோட்டை,ஜூலை22: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், விடுதியுடன் கூடிய பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியானது தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலமாக சிறப்பான கல்வி, தரமான உணவு, சீருடை, பிரெய்லி, அபாகஸ் போன்ற சிறப்பு கற்றல் உபகரணங்கள் பயிற்சி, இசைக் கருவிகள் வாசிக்க பயிற்சி, ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை என அனைத்தும் இலவசமாகவே வழங்கி சிறந்த முறையில் உரிய பாதுகாப்புடன் மாணவர்களின் நலனிற்காக சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கல்வி பயின்றவர்கள் அரசுத்துறையில் கல்லூரி விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுநடுநிலைப் பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி சார்ந்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்டதொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தலைமை ஆசிரியர் வடிவேலன் 9080855199, 9840272383, 04322-226452 ஆகும். முகவரி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுநடுநிலைப்பள்ளி, புதிய பேருந்துநிலையம், புதுக்கோட்டை 622001 ஆகும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து