பாரதியின் நினைவை போற்றிடும் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: பாரதியின் நினைவை போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா; திறம்பாட வந்த மறவன்; அறம்பாட வந்த அறிஞன்; படரும் சாதி படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று; தமிழுக்கு தொண்டு செய்த அப்பைந்தமிழ் தேர்ப்பாகனின் நினைவை போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு