பாம்பாலம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

 

திருவாடானை,மே 8: திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் பாம்பாலம்மன்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் வாணவேடிக்கை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய கீரமங்கல கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை