இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக மாவட்ட செயலாளர் காயர் ஏழுமலை, தலைமை ஆசிரியர் மாலினி ஆசிரியகள், பசுமைத்தாயாக மாவட்ட செயலாளர் செந்தில் நாத் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், பாமக மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், நகரதலைவர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட, நகர வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.