பாமக நகர பொதுக்குழு கூட்டம்

ஓமலூர், அக்.10: ஓமலூர் அடுத்துள்ள கருப்பூர் பேரூர் பாமக சார்பில், நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் மருத்துவர் மாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கருப்பூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை அழகுபடுத்த வேண்டும். கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கஜேந்திரன், வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன், ராமசுவாமி, கார்த்தி, கோவிந்தராஜ், ராமசந்திரன், பாலு, சக்தி, கேசவன், குமார், ரகுபதி, அசோக், முரளி, தனம் ஆறுமுகம், சீனி, ஜெயராம், தென்னரசு, பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர நிர்வாகி பிரகாஷ் நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்