பாபா ராம்தேவ் அடுத்த சர்ச்சை அவங்க அப்பனாலும் கைது செய்ய முடியாது

டேராடூன்: யோகா குருவான பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது என்று கூறினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மன்னிப்பு கேட்பதுடன் ரூ.1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என டேராடூனை சேர்ந்த மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களிலும் பாபா ராம்தேவைக் கைதுசெய்ய வேண்டும் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஆவேசமடைந்துள்ள பாபா ராம்தேவ், ‘சிலர் வெற்று கூச்சல்களை எழுப்பி வருகின்றனர். என்னுடைய பெயரால் தேவையற்ற டிரெண்டிங்கை உருவாக்குகிறார்கள். அவங்க அப்பனாலும் கூட என்னை கைது செய்ய முடியாது’ என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ சர்ச்சையாகி உள்ளது….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!