பாபநாசம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, மனகுண்டு மங்கலம் கிராமம் நடுத்தெருவில் வசித்து வந்தவர் ரவி (53). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வலங்கைமான் தாலுகா, ஆவூர் சன்னதி தெருவில் வசித்து வரும் வெங்கட் நரசிம்ம அய்யர் மகன் ரமேஷ்குமார் என்பவர் உனது மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக விவசாயி ரவியிடம் கடந்த 2021ம் ஆண்டு ரூ.3 லட்சம் வாங்கி உள்ளார். இதன்பிறகு ரவியின் மகனுக்கு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார் ரமேஷ்குமார். பலமுறை பணத்தை திருப்பிக்கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் ரவியை, ரமேஷ்குமார் இழிவாக திட்டியதாக கூறப்படுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்