பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்

விகேபுரம், மார்ச் 14: இசக்கி சுப்பையா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பாபநாசம் அணையில் இருந்து தற்போது தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது அறுவடை முடிந்த நிலையில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது தேவையற்றது. தற்போது குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தேவை உள்ளது. இதனால் கார் பருவ சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவர். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆதலால் விவசாயிகளின் நலன் கருதி தண்ணீரின் அளவை குறைத்து திறந்து விடும் படி அரச அதிகாரிகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை