கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த வேடிச்சிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மயானத்துக்கு செல்ல பாதை அமைத்து தருமாறு அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 40 பேர், மயானத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மண்மங்கலம் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் விடிய விடிய போராட்டம் நீடித்தது. இதில் ஈடுபட்டிருந்த வேலுசாமி (45) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எஸ்பி சுந்தரவடிவேல் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டும் என கோரி்னர். உடனடியாக தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். …