பாணாவரம் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

பாணாவரம் :  ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணாவரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் 4ம் தேதி திடீரென்று காணாமல் போனதாக மைனர் பெண்ணின் பெற்றோர் பாணாவரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மைனர் பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், மைனர் பெண்ணும்,  விக்னேஷ் என்பவரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னைக்குச் சென்ற போலீசார்,  இருவரையும் பிடித்து நேற்று முன் தினம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மைனர் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவரது மகன் விக்னேஷ் (21) கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷை, போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர். மைனர் பெண்ணை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்….

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்