பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மருந்து பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்தவர் பிஜு. தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஆர்யா. இந்த தம்பதியின் பெண் குழந்தை வேதிகா (3). நேற்று காலை பிஜு வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார். வீட்டில் ஆர்யா மட்டுமே இருந்துள்ளார். அப்போது வேதிகா படுக்கையறையில் விளையாடிக்கொண்டிருந்தாள். வேதிகாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் ஆர்யா அதற்கான மருந்தை கொடுத்துவிட்டு பாட்டிலை குழந்தையின் அருகிலேயே வைத்து விட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார். அப்போது வேதிகா மயங்கி கிடந்ததை பார்த்தார். உடனே பதற்றம் அடைந்தவர் குழந்தையை தூக்கிப் பார்த்தார். அப்போது தொண்டைக்குள் மருந்து பாட்டிலின் மூடி சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனே குழந்தையை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.நிலைமை மோசமானதால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு வேதிகாவின் தொண்டையில் சிக்கியிருந்த மூடியை அகற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்